29 ஏப்ரல், 2010

ரணில் - சஜித் இன்று மாலை சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வருமான சஜித் பிரேமதாசவை விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கியத் தேசியக் கட்சியின் உயர் பதவிகளில் எதிர்வரும் வாரங்களில் பாரிய மாற்றம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

அதன் ஓர் அங்கமாகவே இக்கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பு இன்று மாலை இடம்பெறலாம் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக