29 ஏப்ரல், 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலைதீவு ஜனாதிபதியுடன் சந்திப்பு




மீன்பிடி, கடல் போக்குவரத்து தொடர்பில் முக்கிய பேச்சு

சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பூட்டானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சார்க் நாடுகளுக்கிடையில் முக்கியமான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன் மாலைதீவுக்கும் இலங்கைக்குமிடையில் மீன்பிடித்துறை, கடல்வழிப் போக்குவரத்து தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

அபிவிருத்தியில் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தால் மட்டுமே முடியுமென தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களில் நாட்டு மக்கள் அதனை நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இரு நாடுகளினதும் மீன்பிடித் தொழில் துறையை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய ப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்திரமான வேலைத் திட்டமொன்றை முன்னெ டுப்பது சம்பந்தமாகவும் இரு நாடுகளுக்குமிடையில் கடல் வழி போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பிலும் இரு நாட்டுத்தலை வர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையின் தற்போதைய அர சாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு நாட்டு மக்கள் பூரண ஆதரவு வழங்கிவருவதைக் காண முடிகிறது என தெரிவித்த மாலைதீவு ஜனாதிபதி, நாட்டிற்கு நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வந்துள்ளது போன்று நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் பலமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

நேபாளப் பிரதமர் மாதங்கு மாரைக் கடந்த செவ்வாயன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

பூட்டான் பிரதமர், அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் ஆகி யோரைச் சந்தித்துள்ள ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேச்சுவார் த்தை நடத்தவுள்ளார்.

மேற்படி சந்திப்புகள் பூட்டான் திம்பு நகரில் உள்ள சார்க் கிராமத் தின் இலங்கை இல்லத்தில் இடம் பெற்றுள்ளதுடன் இச்சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக