15 ஏப்ரல், 2010

பின்லேடன் எங்கள் நாட்டில் இல்லை பாகிஸ்தான் பிரதமர் சொல்கிறார்






பயங்கரவாத தலைவரான பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை என்று அந்த நாட்டு பிரதமர் கிலானி கூறிஇருக்கிறார். அமெரிக்கா வந்து இருக்கும் அவர் அந்த நாட்டு டி.வி.சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

பின்லேடன் பாகிஸ்தானில் நிச்சயமாக பதுங்கி இருக்கவில்லை. அவர் அங்கு தங்கி இருந்தால் சமீபத்தில் எடுக்கப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளில் தப்பி இருக்க முடியாது. பாகிஸ்தான் ராணுவம் ஸ்வாத், தெற்கு வசீரிஸ்தான், ஆரக்சி ஆகிய இடங்களில் பரவலான முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்கள் ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்துள்ளது. பின்லேடன் அங்கு பதுங்கி இருந்தால், அவர் உயிருடன் பிடிபட்டு இருப்பார். அவர் உயிருடன் இருக்க முடியாது என்று தான் நான் நம்புகிறேன். ஆனால் உறுதியாக தெரியாது. ஒருவேளை அவர் உயிருடன் இருந்தாலும் இருக்கலாம்.

தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. தீவிரவாதிகள் எப்போதும் தீவிரவாதிகள் தான். அவர்களுடன் பேசக்கூடாது.

இவ்வாறு கிலானி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக