15 ஏப்ரல், 2010

இத்தாலியில் ரெயில் தடம் புரண்டதில் 7 பேர் பலி






இத்தாலி நாட்டில் போல்சானோ நகரில் ரெயில் தடம் புரண்டதில், 7 பேர் பலியானார்கள். 25 பேர் காயம் அடைந்தனர். அதிகாலை 7 மணிக்கு இந்த நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போதுதான் ஒரு ரெயில் அந்த வழியாக சென்றது. இதில் 2 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன.

காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலமாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த ஊரில் கடந்த 2005- ம்ஆண்டு தான் புதிய ரெயில் பாதை தொடங்கப்பட்டது. இதனால் இந்த ஊர் வழியாக செல்லும் ரெயில் பாதை நவீனமானது ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக