15 ஏப்ரல், 2010

கண்டி மாவட்டத்தின் ஒரு சிலரின் வெற்றி நாவலப்பிட்டி வாக்காளர்களின் கையில்



நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள 37 வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெறவுள்ள மீள் வாக்களிப்பினை முன்னிட்டு நாவலப்பிட்டிய நகரப்பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளுக்குஅமர்தப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்திலுள்ள நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் 85,136 வாக்காளர்கள் உள்ளனர்.இவர்களில் சுமார் 16,000 பேர் தமிழ் வாக்காளர்களெனத் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை ஆளுங்கட்சியின் சார்பில் எடுக்கப்போகின்றவர் யார் என்பதை நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் மீள் வாக்களிப்பே தீர்மானிக்கப்போகின்றது.

அதேவேளை நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் மீள் வாக்களிப்பில் கண்டி மாவட்டத்தில் ஆளுங்கட்சியில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர் ஒருவரினதும் தமிழ் வேட்பாளர் ஒருவரினதும் வெற்றி தங்கியுள்ளதோடு ஜனநாயக தேசிய முன்னணிக்கு ஓராசனம் கிடைப்பதும் இதில் தங்கியுள்ளதாகா தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக