15 ஏப்ரல், 2010

சரண் அடையுங்கள், இல்லையேல் கைது செய்வோம் கிர்கிஸ்தான் அதிபருக்கு அந்த நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை







கிர்கிஸ்தான் அதிபர் பாகியேவ் ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து விட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி அவரை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர். தலைநகரை விட்டு வெளியேறி, தலைமறைவாக இருக்கும் அவருக்கு இடைக்கால அரசாங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அவர் 24 மணி நேரத்துக்குள் சரண் அடையவேண்டும். இல்லாவிட்டால் அவரை கைது செய்வோம் என்று அந்த நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதிக்குரிய சட்டப்பாதுகாப்பை நாங்கள் ரத்துசெய்து விட்டோம். அவர் தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அவர் தன் ஆதரவாளர்களுடன் ஜலலாபாத்தில் பதுங்கி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். அவர் சரண் அடையாவிட்டால், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக