19 மார்ச், 2010

பழ வியாபாரி படுகொலை; கரங்களும் துண்டிப்பு : கண்டியில் சம்பவம்

முச்சக்கரவண்டியொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலர் பழ வியாபாரி ஒருவரை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அவரது இரு கரங்களையும் துண்டித்து எடுத்துச் சென்ற சம்பவமொன்று கண்டியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக, பட்டப்பகலில் பெருந்தொகையான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜீ.டீ. பிரேமசந்திர (வயது 38) என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் வருகை தந்த கண்டி நீதிமன்ற நீதிவான் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத நபர்களுக்கும் படுகொலை செய்யப்பட்ட பழ வியாபாரிக்கும் இடையில் இருந்த முற்பகையே இக்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக