19 மார்ச், 2010

ஆஸ்திரேலியாவை மிரட்டும் புயல்: கப்பல்கள் நிறுத்தம்






ஆஸ்திரேலியாவில் டார்லிம்பிள் வளைகுடா பகுதியில் கடுமையான புயல் கிளம்பியுள்ளது. இது மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது கரையை கடக்கும்போது பலத்த மழையுடன் கடுமையான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஆஸ்திரேலியாவின் டார்லிம்பிள் துறைமுகம் மூடப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் கப்பல்கள் மூலம் அதிக அளவில் நிலக்கரி ஏற்றுமதி செய்யப் படுகிறது. கடலில் கடுமையான காற்று வீசுவதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குவின்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கரும்பு தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத னால் சர்க்கரை உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக