19 மார்ச், 2010

வெற்றியைவிட வன்னி மக்களுக்கு சேவை செய்வதே எனது முதல் இலக்கு-எ.சி.கைலேஸ்வர்ராஜா!





தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வன்னி மாவட்ட தலைமை வேட்பாளரான கட்சியின் பொதுச் செயலாளர் திரு. எ.சி.கைலேஸ்வர்ராஜா அவர்கள் வன்னி மாவட்ட மக்களோடு உறவாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமது கட்சியினது வெற்றியைப் பற்றியோ அல்லது தனது வெற்றியை இலக்காக வைத்தோ இத்தேர்தலில் களம் இறங்கவில்லை என்றும்இ கடந்த போராட்ட காலத்தில் உயிர்களையும் உடமைகளையும் இழந்து துயருறும் எம் உறவுகளுக்கு தேர்தலில் ஏற்படுகின்ற வெற்றி தோல்விக்கு அப்பால் சிறந்த சேவையாற்ற வேண்டும் என்பதேயன்றி கட்சியின் வெற்றியை இலக்கு வைத்தோ அல்லது தனது நாடாளுமன்றக் கதிரையை இலக்கு வைத்தோ இத்தேர்தலில் களமிறங்கவில்லை என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் எ.சி.கைலேஸ்வர்ராஜா அவர்கள் வன்னி மாவட்ட மக்களோடு உறவாடியபோது தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக