19 மார்ச், 2010

பணியகத்தில் பதிவு செய்தால் ரூ. ஒரு இலட்சம் என்பது வதந்தி எச்சரிக்கையுடன் இருக்க கோருகிறார் கிங்ஸ்லி

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்று நாடு திரும்பியவர்கள் பணியகத்தில் தங்களை பதிவு செய்துகொண்டால் ஒரு இலட்சம் ரூபா தருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்று தற்போது நாடு திரும்பியுள்ளவர்களின் பங்களிப்பையும் நாட்டின் அபிவிருத்திக்கு பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக பணியகம் அவர்களது தரவுகளை சேகரித்து வருகிறது. குறிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் அவர்கள் சென்ற நாடு தொழில், பெற்ற சம்பளம், அனுபவம் உட்பட அனைத்து தரவுகளையும் பணியகத்துக்கு வழங்குவதன் ஊடாக அவர்களது தொழில் அனுபவம் குறித்து இலங்கையில் தனியார் துறையில் பங்களிப்புகளை பெற்றுக்கொடுக்க முடியுமா? என்பது பற்றியும் பணியகம் ஆராயவுள்ளது.

நாட்டிலுள்ள பணியகத்தின் கிளை அலுவலகங்களில் தேவையான விண்ணப்பப் படிவங்களை பெற்று தரவுகளை வழங்குமாறும் பிரதேச செயலகங்களினூடாகவும் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளும் விதத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக