24 மார்ச், 2010

நான் அப்பாவி: வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி நித்யானந்தா மனு




தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுகர்நாடகா, பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தாவுக்கு எதிராக, அவரிடம் சீடராக இருந்த தர்மானந்தா என்பவர், தமிழக போலீசாரிடம் புகார் அளித்தார். பிடதி ஆசிரமம் கர்நாடகாவில் இருப்பதால், இந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. நித்யானந்தா மீது, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும்படி, நித்யானந்தா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், 'நான் ஒரு அப்பாவி. எனக்கும், ஆசிரமத்துக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் ஜாமீன் மனு தள்ளுபடி: நித்யானந்தாவின் முன் ஜாமீன் மனுவை, கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. 'தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று நித்யானந்தா, கர்நாடக ஐகோர்ட்டில் மனு செய்தார். மனுவில், பிடதி போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே சட்டப்படி புகார் பதிவு செய்யலாம். மூன்றாவது நபர், என் பெயருக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், பணம் பறிக்கும் எண்ணத்துடனும் புகார் செய்துள்ளார். முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி அரளு நாகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சாமியார் நித்யானந்தா முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த, பிடதி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக