24 மார்ச், 2010

அமெரிக்க-பாகிஸ்தான் இராணுவப் பேச்சு





பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் இராணுவத் தளபதிகள்
பாகிஸ்தான் இராணுவத் தளபதி மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளின் தளபதி
அமெரிக்கா பாகிஸ்தான் இடையே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன

பாகிஸ்தான் இராணுவத் தளபதியும் அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவரும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான கேந்திர மற்றும் இராணுவம் முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவக் குழுக்களுக்கு இடையேயான ஒரு வாரகால பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்ஃபக் கியானி அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் அந்நாட்டின் கூட்டுப்படைகளின் தளபதியான அட்மிரல் மைக் முல்லனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

2013 ஆண்டு வாக்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் முகமான முன்னெடுப்புகளை பராக் ஒபாமா அவர்கள் செய்துவரும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறும் நிலையில் அதற்கு பாகிஸ்தான் எந்த வகையில் உதவ முடியும் என்றும் அதே நேரம் மிதவாத நோக்குடைய தாலிபான்களை கொண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு ஆட்சியை அமைக்க முடியுமா என்பது போன்றவை இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர் டாக்டர் சுபா சந்திரன் கருத்து வெளியிடுகிறார்.

ஆப்கானிஸ்தானின் அரசியல் விடயத்தில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வலியுறுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக