17 மார்ச், 2010

தேர்தல் முறையை மாற்றியமைக்க ஜனாதிபதி தயார்:பந்துல



தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை முழுமையாக மாற்றியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருப்பதாக வர்த்தகம் விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாகவது,"அதற்காகவேண்டி அமைச்ச திணேஷ் குணவர்தன தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் தேர்தலின் போது தொகுதி வாரியாக மக்களுக்கு நெருக்கமானவர்களை தெரிவு செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

தற்போதுள்ள விருப்பு வாக்கு முறையால் கொலை செய்யும் அளவுக்கு வன்முறைகள் இடம்பெறும் நிலை ஏற்படுகிறது. உரிய அனுபவமுள்ள அறிவாற்றல் உள்ள தலைவர்களையே நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்ய வேண்டும்.

இதற்காக தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றியமைக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அதிகப் பெரும்பான்மை அதிகாரம் உள்ளதாக இருக்க வேண்டும்" என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக