17 மார்ச், 2010

ஜெனரல் சரத்பொன்சேகா இரானுவ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்










ஜெனரல் சரத்பொன்சேகா இரானுவ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்
பாதுகாகப்பு படையினரின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட முதலாவது இரானுவ நீதிமன்றம் கடற்படை தலமயகத்தில் நேற்றயதினம் கூடியது. மேஜர் ஜெனரல் எச்.ஏ. வீரதுங்க தலைமையில் கூடிய இந்த நீதி மன்றில் ஜெனரல் சரத்பொன்சேகா தனது சட்டத்தரனிகளுடன் மன்றத்துக்கு சமுகமளித்து இருந்தார்.

இதன் போது இரானுவ சடடத்துக்கு கீழ் சரத்பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 03 குற்றசாட்டுக்கள் இங்கு முன்வைக்கப்பட்டன. இரானுவ நீதிமன்றத்தில் உறுப்பினர்கள் வழங்கும் தீர்ப்பு நீதிக்கு அச்சுறுத்தலாக இருக்ககூடும் என சட்டதரனிகள் இங்கு சுட்டிகாட்டியதாக னெரல் சரத்பொன்சேகா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரனிகளின் குழுவின் உறுப்பினரான சுனில் வட்டவள தெரிவித்துள்ளார்.

இரானுவ நீதிமன்றம் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்த போது அதற்கு அவரது சட்டதரனிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்கால நடவடிக்கைகளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவது அவசியம் என்பதனால் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பொன்சேகாவுக்கு எதிராக இரானுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என அவரது சட்டதரனிகள் முன்வைத்த விடயங்கள் தொடர்பாக சட்டரீயிலா ஆவணங்களை முன்வைப்பதற்கு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி விரை கால அவகாசம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை கண்டித்து இன்று பல இடங்களில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்ட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக