17 மார்ச், 2010

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு







ராமேஸ்வரம்:இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தடுத்து விரட்டியடித்துள்ளனர்.சோனியா வருகையையொட்டி, இரண்டு நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த, மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள்,வழக்கம்போல் படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.


இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற இவர்களை, இலங்கை கடற்படையினர் தடுத்து விரட்டியடித்துள்ளனர்.இதனால், போதிய மீன்வரத்து இல்லாமல் கரை திரும்பினர். இதனிடையே, இரட்டைமடி வலையில் பிடித்து வரப்பட்ட பேசாளை மீன்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை, ராமேஸ்வரம் தாசில்தார் முருகேசன் மற்றும் வருவாய்த்துறை யினர் பிடித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக