28 மார்ச், 2010

அமெரிக்க இராணுவ அகடமியில் பயில்வதற்கு இலங்கை இராணுவம் சமர்ப்பித்த பட்டியல் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தால் நிராகரிப்பு

மெரிக்க இராணுவ அகடமியில் விசேட பாடநெறியை பயில்வதற்காக இலங்கை இராணுவத்தினர் சமர்ப்பித்த பயிற்சி பெறும் அதிகாரிகளின் மூன்று பட்டியலை அமெரிக்க ராஜாங் கத் திணைக்களம் நிராகரித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என அரசசார்பற்ற நிறுவனங்கள் அமெரிக்காவிடம் சமர்ப்பித்திருந்த அறிக்கைகளே இதற்கான காரணமாகும். விண்ணப்பங்களை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நிராகரித்தமை குறித்து அமெரிக்க இராணுவத்தினர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இலங்கை விமானப் படை மற்றும் கடற்படையினர் அமெரிக்காவில் பயிற்சிகளை பெற எந்த தடையும் விதிக்கப்படவில்லை. _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக