28 மார்ச், 2010

இடம்பெயர்ந்தவர்களில் 1லட்சத்து 93ஆயிரம் பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு





வடக்கில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 1லட்சத்து 93ஆயிரம் பேர் இதுவரை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும்இ இன்னமும் 76ஆயிரத்து 205பேரே எஞ்சியுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு மீள்குடியேற்றப்படாமல் எஞ்சியுள்ளவர்கள் ஆறு நிவாரணக் கிராமங்களில் மாத்திரமே தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் எல்.எம்.ஹால்தீன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிஇ முல்லைத்தீவு மற்றும் மடுப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் நிவாரணக் கிராமங்களிலிருந்து நாளாந்தம் 23ஆயிரம்பேர் வௌ;வேறு இடங்களுக்கும் உறவினர் வீடுகளுக்கும் சென்றுவருகின்றனர். இவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செல்பவர்கள் தினமும் மாலை நிவாரண முகாம்களுங்களுக்கு திரும்பிவிட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக