26 பிப்ரவரி, 2010


விடுதலைப்புலிகளும் புலம்பெயர் தமிழர்களும்
உலகத் தமிழர் பேரவையின் சின்னம்



இலங்கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் கவலையளிப்பதாகவும், எந்தக் கட்சியினர் தமது குறிக்கோளில் உறுதிப்பாட்டுடன் உள்ளார்களோ அவர்களை தாம் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக் கப்பட்ட பின்னரான காலகட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து, ஐ சி ஜி எனப்படும் சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அறிக்கையில் சில யோசனைகளை பரிந்துரை செய்திருந்தது.

அதில் முக்கியமாக, வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்கள் இனிமேலாவது
விடுதலைப்புலிகளின் வழிமுறைகளை நிராகரிக்க வேண்டும் என்று ஐ சி ஜி அமைப்பு கூறியிருக்கிறது.

இந்த அறிக்கை குறித்தும், அதன் பரிந்துரைகள் குறித்தும் உலக தமிழர் பேரவையின் கருத்து என்ன என்று அதன் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்ட போது, தமிழோசைக்கு அளித்த செவ்வியில் இமானுவல் அடிகளார் இவ்வாறு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக