26 பிப்ரவரி, 2010

இலங்கையில் வேட்புமனுத் தாக்கல் நிறைவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால எல்லை வௌ்ளிக்கிழமை நண்பகலுடன் முடிவடைந்துள்ளது. வடக்கு கிழக்கு, தலைநகர் மற்றும் மலையகம் உட்பட அனைத்துப் பாகங்களிலிருந்தும் பெருமளவான தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வடக்கே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜேவிபி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இந்தக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றுள்ள சிவாஜிலிங்கத்தின் புதிய கட்சி, ஈபிடிபி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) உட்பட வேறு தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் சார்பில் 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

இவர்களில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்துள்ள சிவநாதன் கிஷோர் மற்றும் சதாசிவம் கனகரட்ணம் ஆகியோர் அரசுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் தலைநகரிலும் தமிழ்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக