26 பிப்ரவரி, 2010



யாழ்ப்பாணத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) வேட்புமனுத் தாக்கல்,



மட்டக்களப்பில் புளொட் வேட்புமனுத் தாக்கல்- எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் இன்றையதினம் முற்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை வேட்பாளரான ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் திருநாவுக்கரசு சிறீதரன் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். திருநாவுக்கரசு சிறீதரன், கந்தையா சிவராஜா, நாகமணி நீக்கிளாஸ் அரியரட்ணம், காளிகுட்டி ஜெயகுமாரன், வசந்தநாதன் சிவநாதன், ராஜேந்திரன் செல்வராஜா, கைலாயபதி பகிரதன், துரைராஜா மகாலிங்கம், ராஜரட்ணம் கோணேஸ்வரன், தில்லைநாதன் தங்கவேலு, அரியகுட்டி யோகன், சின்னத்தம்பி தங்கராஜா ஆகியோர் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) கட்சியின் சின்னமான மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கென புளொட்; சார்பில் நங்கூரம் சின்னத்தில் அதன் தலைமை வேட்பாளரான பெனடிக்ட் தனபாலசிங்கம் இன்று முற்பகல் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பெனடிக்ட் தனபாலசிங்கம், மயில்வாகனம் நிஸ்கானந்தராஜா, பொன்னம்பலம் செல்லத்துரை, நல்லதம்பி சண்முகநாதன், நாகமணி சிவராஜா, செல்லத்துரை கணேசலிங்கம், முருகேசு கிருபானந்தன், செல்லத்துரை தங்கராஜா ஆகியோர் புளொட்; சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக