15 நவம்பர், 2009

கப்பலிலிருந்து வெளியேறிய 78இலங்கையர்கள் பின்டன் தீவுக்கு அனுப்பிவைப்பு-

அவுஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம்கோரிச் சென்றிருந்த 78இலங்கையர்களில் 22பேர் அவர்கள் தங்கியுள்ள கப்பலிலிருந்து நேற்று வெளியேறியுள்ளனர். இந்த 22இலங்கையர்களில் அரசியல் புகலிடம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிங்கப்பூருக்கு பின்டன் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்டன் தீவிலுள்ள அவுஸ்திரேலிய முதலீட்டினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தஞ்சன்பினான் என்ற நிலையத்தினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதேவேளை அவுஸ்திரேலியாவின் அரசியல் புகலிடம் எதிர்பார்த்துச் சென்ற ஏனைய 56இலங்கையர்களும் தொடர்ந்தும் ஓசியானிக் வைகிங் கப்பலில் தங்கியுள்ளனர். இவர்கள் கப்பலிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் நான்கிற்கும் ஆறிற்குமிடையிலான வாரங்களுக்குள் அவர்களுக்கு தங்குமிடம் பெற்றுக்கொடுக்க அவுஸ்திரேலிய அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக