15 நவம்பர், 2009

பெற்ற வெற்றிகளை விமர்சிக்காது அதனை சர்வதேச சமூகம் பாடமாகக் கொள்ள வேண்டுமென பாதுகாப்புச்செயலர் வலியுறுத்தல்-

பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பவர்களின் பிரச்சாரங்களை ஏற்கவேண்டாமென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்நாட்டிற்கு எதிராக தொடர்ந்தும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாட்டை மேற்கொள்ளும் நாடுகள் இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்நாட்டிற்கும் பிரச்சினைகளும் சவால்களும் இருப்பதாக தெரிவித்த அவர், தம்மால் பெறப்பட்ட வெற்றிகளை விமர்சிக்காது அதனை சர்வதேச சமூகம் பாடமாகக் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் முனைப்பான முறையில் செயற்படுவதாக குறிப்பிட்ட அவர், சகல இலங்கையர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைத் தவிர்த்துக் கொள்ளமுடியுமென்றும் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக