25 அக்டோபர், 2009

புலிகளுடன் தொடர்புடைய இருவர் கொழும்பில் புலனாய்வுப் பிரிவினரால் கைது-
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் புலி உறுப்பினர் கைது-

அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ்மா அதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். பொலீசாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர் புலிகளின் மருத்துவப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினர் என அக்கரைப்பற்று பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். 21வயதுடைய குறித்த புலி உறுப்பினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொழும்பில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்றுமாலை கைதுசெய்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து டைமர்கள் 03, டெட்டுனேற்றர் 01 மற்றும் சீ4 ரக வெடிபொருள் 870கிறாம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் 26வயதுடைய இளைஞர்கள் எனவும், இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேல்மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக