25 அக்டோபர், 2009

பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்பு:பெற்றோலிய கூட்டுத்தாபனம்


பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்புமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கங்களுடனான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுத்து விநியோக நடவடிக்கைகளை இன்று மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தொரதெனிய தெரிவிக்கையில்," பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களில் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று முன் தினம் முதல் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. எனினும் டீசலுக்கான தட்டுப்பாடு நிலவவில்லை. அத்துடன் சில நிலையங்களில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றொல்ல நியோகிக்கப்படுகின்றது." எனத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக