25 அக்டோபர், 2009

சமளங்குளத்தைச்சேர்ந்த திரு.திருநாவுக்கரசு கிருபாகரன்
(தோற்றம்
12.02.1978.. மறைவு-24.10.2009) மரணமானார்


kirubakarankrans22.gif

வவுனியா சமளங்குளத்தைச் சேர்ந்த திரு.திருநாவுக்கரசு கிருபாகரன் (தோற்றம்-12.02.1978.. மறைவு-24.10.2009) மரணமானார் என்பதை அவரது குடும்பத்தினர் சார்பாக புதியபாதை இணையம் ஆழ்ந்த துயரத்துடன் அனைவருக்கும் அறியத் தருகின்றது. இவர் திரு.திருமதி திருநாவுக்கரசு பாக்கியம் ஆகியோரின் அன்பு மகனும், ஈச்சங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியை கிருபாவின் அன்புக் கணவரும், தருணியின் (01வயது மகள்) பாசமிகு தந்தையும், அமரர் சிவகுரு, திருமதி சி.சித்திரம் ஆகியோரின் மருமகனுமாவார். மற்றும் சுபாஜினி, சீலகுமார் (சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருமதி. சீ.வாசுகி, திரு.க.சிவநேசன் (பவன் -புளொட் மத்தியகுழு உறுப்பினர்) ஆகியோரின் மைத்துனரும், கிதுர்சன், பொன்சிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், நிருபா, பிரணவன், சச்சுதன் ஆகியோரும் அன்பு மாமனும், பரமானந்தம், சோமசுந்தரம், சிவசுப்பிரமணியம், நமசிவாயம், கண்ணன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன், அன்னாருக்கு அதிரடி இணையம் சார்பில் ஆழ்ந்த அஞ்சலிகளையும் செலுத்திக் கொள்ளுகின்றோம். இறுதிக் கிரியைகள் தொடர்பிலான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக