30 ஆகஸ்ட், 2009

மேனிபாம் முகாம்
மேனிக்பாம் முகாம்

இடைத்தங்கல் முகாமில் இருந்து வெளியே செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புகார்


இலங்கையின் வடக்கே வவுனியா மெனிக்பாம் பகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள், ஒரு முகாமில் இருந்து அடுத்த முகாமுக்குச் செல்ல முடியாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்புக்கு மத்தியிலும் அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் இராணுவத்தினரால் தாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான ஒரு சம்பவம் ஞாயிற்றுகிழமை காலையில் இராமநாதன் இடைத்தங்கல் முகாமில் நடைபெற்றிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தான் நேரில் கண்டதாகவும், தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் தண்ணீருக்குப் பெரும் கஷ்டமான நிலை காணப்படுவதாகவும், கழிப்பறை வசதிகள் கூட போதிய அளவில் இல்லை என்று அந்த முகாமைச் சேர்ந்த ஒரு பெண்மணி தெரிவித்தார்.

இதற்கிடையில் முகாம் வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருப்பதாகவும், அங்குள்ள கூடாரங்களில் அளவுக்கு அதிகமானவர்களைத் தங்க வைக்கப்பட்டிருப்பதனால் இட நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக மற்றுமொருவர்

கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக