30 ஆகஸ்ட், 2009

இந்தியாவுடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை இலங்கை மேற்கொள்ளுமென புதிய உயர்ஸ்தானிகர்
தெரிவித்துள்ளார்



இந்திய அரசுடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றப்பணிகளை அரசாங்கம் மேற்கொள்ளுமென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக அரசாங்கம் தற்போது துரிதகதியில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இரு நாடுகளுக்குமிடையில் முன்பு இருந்த சிறந்த உறவுகள் பேணப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தின் இலக்குகளை அடையக் கூடியதாகவிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக