30 ஆகஸ்ட், 2009

தென் மாகாணசபைத் தேர்தலுடன் தொடர்புடைய முதலாவது வன்முறைச்சம்பவம்-

தென் மாகாணசபைத் தேர்தலுடன் தொடர்புடைய முதலாவது வன்முறைச் சம்பவம் நேற்றுமாலையில் அம்பாந்தோட்டையின் திஸ்ஸமகாறாமைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தவகையில் நேற்றுமாலை 6.45மணியளவில் ஐ.தே.கட்சி ஆதரவாளர்களுக்கும், ஜே.வி.பியின் ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. தென் மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே மேற்படி மோதல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளை திஸ்ஸமகாறாமைப் பொலீசார் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை தென் மாகாணசபைத் தேர்தலுக்காக கடந்த 21ம் ஆரம்பிக்கப்பட்ட வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகள் இன்றுநண்பகல் 12மணியுடன் நிறைவடைந்துள்ளன. இத்தேர்தலுக்காக 18அரசியல் கட்சிகள் மற்றும் 13சுயேட்சைக்குழுக்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக