30 ஆகஸ்ட், 2009

அங்குலானைப் பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த கிளைமோர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது


கொழும்பு புறநகரான இரத்மலானையின் அங்குலானைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அதி சக்திவாய்ந்த இரு கிளைமோர் குண்டுகள் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளன. கிளைமோர்களை விசேட புலனாய்வுப் பிரிவினரே மீட்டுள்ளதாகவும், இது தொடர்பிலான விசாரணைகளை விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே இவை மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக