30 ஆகஸ்ட், 2009

தம்பிலுவிலில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் மீது துப்பாக்கிச் சூடு






அம்பாறை மாவட்டம் தம்பிலுவிலில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யோகநாதன் சுரேஸ்குமார்(31வயது) என்ற இந்நபர் தனது வீட்டிலிருந்த வேளை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ, இதற்கானபின்னணியோ இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக