10 ஜூன், 2011

பொன்சேகாவிற்கு கயிறு கொடுத்தது யார் : தினேஷ்

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் போட்டியிட்டிருக்கலாம் எனினும் சூழ்ச்சி செய்தனர். இதில் சரத் பொன்சேகாவிற்கு கயிறு கொடுத்தது யார் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பியது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது யுத்தத்திற்கு பின்னர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் எண்ணிக்கை, தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்கள் உள்ளிட்ட விபரங்களை கேட்டிருந்தார்.

கேள்விக்கு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான தினேஷ் குணவர்தன பதிலளித்துக் கொண்டிருந்தார்.

இதனிடையே குறுக்கிட்ட ஐ.தே.க.எம்.பி யான ரவி கருணாநாயக்க, அப்படியாயின் சரத் பொன்சேகாவை எப்போது விடுவிப்பீர்கள் என வினவினார்.

அவர் தனது கடமைகளை செய்திருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் சூழ்ச்சியின் மூலம் அவருக்கு கயிறு கொடுத்தது யார் என அமைச்சர் தினேஷ் வினவினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக