10 ஜூன், 2011

இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கையை தாரைவார்க்க இரகசிய ஒப்பந்தம்: ரில்வின்

இந்த அரசு இரட்டைவேடம் பூண்டு ஆட்சி நடத்துவதுடன் இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கையை தாரைவார்க்க இரகசிய ஒப்பந்தம் செய்வதாக ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசப்பற்றுள்ளவர்கள் எனக் கூறிக்கொண்டே தேசப்பற்று அற்ற விதத்தில் இந்த அரசு செயற்படுகின்றது.

கண்டி அஞ்சல்கட்டிடத் தொகுதி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை அரசு வெளிநாடுகளில் ஒன்றையும் உள் நாட்டில் வேறொன்றையும் கூறுகிறது.

பான்கீமுன் அல்லது அவர்களது பிரதிநிதிகளை இலங்கைக்கு வர விசா வழங்கமாட்டோம் என்று கூறியபோதும் ஐ.நா. சபைக்கான இலங்கைப் பிரதிநிதி பான்கீமூனை அழைத்து பகற்போசன உணவு வழங்கி பேச்சுவார்த்ததையில் ஈடுபடுகின்றார்.

இலங்கையில் வடபகுதிக்கான புகையிரதப்பாதை உட்;பட தென்பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து விட்டு கிழக்கு மாகாணத்தில் சம்பூர் பிரதேசத்தை அவர்களுக்கு தாரை வார்த்துள்ளது.

தம்மை தேசப்பற்றுள்ளவர்கள் எனக் கூறும் அரசு உண்மையான தேசப் பற்றாளர்கள் அல்லவென்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக