23 மே, 2011

மன்னார் பெரிய தம்பனை பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

மன்னார் பெரிய தம்பனையில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

பெரிய தம்பனைக் குளக்கரையில் உள்ள மரமொன்றின் கீழ் புதைக்கப் பட்டிருந்த 25 ரவைகள் மீட்கப்பட்டதாகவும் இவற்றுள் 15 ரவைகள் துருப்பிடித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிகுதி ரவைகள் பெரிய தம்பனை இராணுவ முகாமில் ஒப்படைக்கப் பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக