23 மே, 2011

நெடியவன் கைது: உன்னிப்பாக கவனிக்கிறது இலங்கை

புலிகளின் முக்கியஸ்தர் நெடியவன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின்னரான நிலைமைகளை உன்னிப் பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நெடியவனின் கைது மற்றும் அவர் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் பற்றி அவதானித்து வருவதுடன், நெடியவனின் பயங்கரவாத நடவடிக்கைகள் இலங்கையைப் பாதிக்குமா என்பது பற்றி ஆராயப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நோர்வேயில் புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சியான கொன்ச வேர்டிவ் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. புலி பயங்கரவாதிகள் நோர்வேயில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது என நோர்வே எதிர்க்கட்சி குறிப்பிட்டு ள்ளது.

புலிகள் அமைப்புக்காக ஐரோ ப்பா உட்பட பல்வேறு நாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நோர்வேயில் வசித்து வந்த நெடியவன் ஹொலன்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக