23 மே, 2011

ஐ.நா. மனித உரிமை பேரவை கோரினால் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை: மார்ட்டின்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முடியும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான முதன்மையான அதிகாரம் இலங்கை அரசாங்கத்திடமே காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது, அவ்வாறான குற்றச் செயல்களுக்கு தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதற்கான அதிகாரமும் அவ்வரசாங்கத்துக்கே உரித்துடையதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேச்சாளர் நெசர்கீ மேலும் கூறியுள்ளதாவது,

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை, மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுச் சபை ஆகியவற்றினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும். மேற்படி அமைப்புகள் எந்தவித கோரிக்கைகளையும் எடுக்காத நிலையில் இலங்கை அரசாங்கம் அவ்வாறானதொரு விசாரணைக்கு கோரிக்கை விடுக்கும் பட்சத்திலேயே யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 30 ஆம் திகதி முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகவிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக