23 மே, 2011

புனர்வாழ்வு பெற்ற 900 பேர் 5ம் திகதி சமூகத்தில் இணைப்பு






புனர்வாழ்வு பெற்ற 900 பேர் எதிர்வரும் 5ஆம் திகதி சமூகத்தில் இணைக்கப் படவுள்ளனர்.

அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க தெரிவித்தார்.

சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்படு வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 900 பேரின் பட்டியல் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புனர்வாழ்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் பயிற்சிகள் வழங் கப்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளுடன் உள்ள முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் தொடர்பாக இம்முறை அக்கறை செலுத் தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 4095 பேர் தற்போது புனருத்தாரண முகாம்களில் உள்ளதாகவும் அவர்கள் படிப்படியாக புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படுவார்களென்றும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக