12 மார்ச், 2011

ஜப்பானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்காலம் என அச்சம்



ஜப்பானின் நேற்று ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத்தாண்டலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் காணாமல் போயுள்ளதால் உயிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதியாகக் கூறமுடியாமல் உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று அங்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகளில் 9.0 என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 50 முறைகள் இந்த அதிர்வுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ்வதிர்வானது நியூசிலாந்தில் ஏற்பட்டதைவிட 8 ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்ததாக அளவிடப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையொன்று இச் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

டோக்கியோ அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலும் தீ பிடித்தது.

அணுமின் நிலையங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. டோக்கியோவில் மாத்திரம் நாற்பது இலட்சம் பேரின் மின்னிணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அதிவேக ரயில்கள் காணாமல் போயுள்ளதாகவும் 100 பிரயாணிகளை ஏற்றிச் சென்ற கப்பலொன்று சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக