12 மார்ச், 2011

அரசியலமைப்புக்கான 18வது திருத்தம்: சுதந்திர ஆணைக் குழுக்களை அரசு விரைவில் செயற்படுத்தும்


சுதந்திர ஆணைக் குழுக்களை அரசாங்கம் விரைவில் செயற்படுத்தும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார். 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின் ஆணைக் குழுக்களை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது குறித்து அவர் கவலை தெரிவித்தார். ஐ. ம. சு. முன் னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

சுயாதீன ஆணைக் குழுக்களை செயற் படுத்தும் தேவை இருந்ததாலே அரசாங்கம் 18ஆவது திருத்தத்தை விரைவாக அமுல்படுத்தியது. எனவே, ஆணைக்குழுக் களை செயற்படுத்தாதிருக்கும் தேவை அரசுக்கு இல்லை. இதில் இருந்து அர சாங்கம் ஒதுங்காது. குறுகிய காலத்தில் செயற்படுத்துவோம். தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவின் கீழ் நடைபெறும் இறுதித் தேர்தல் இதுவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக