12 மார்ச், 2011

'முகாம்' வார்த்தையே விவாதத்திற்குரியது: விமல் வீரவன்ச


இந்தியாவின் தமிழகத்தில் புலிகளின் பயிற்சி முகாம்கள் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்த விடயத்தில் முகாம் என்ற வார்த்தையே விவாதத்துக்குரியது.

மாறாக புலிகள் இந்தியாவில் செயற்படுவதாகவும் அவர்களினால் இந்திய தலைவர்களுக்கு ஆபத்து என்றும் அண்மையில் இந்திய புலனாய்வு தகவல்களே தெரிவித்திருந்தன என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மனறக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முதலில் குறித்த கேள்விக்கு அமைச்சர் டலஸ் அழகப்பெரும பதிலளித்தார். அதன் பின்னர் அமைச்சர் வீரவன்ச பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக