3 பிப்ரவரி, 2011

பொன்சேகாவுக்கு உரிய வசதிகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு




சிறையிலுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு முன்னர் இராணுவ நீதிமன்றம் வழங்கும்படி கூறிய சகல வசதிகளையும் வழங்கும் படி வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர நேற்று புதன்கிழமை பணிப்புரை வழங்கியுள்ளார்.

முன்பு ஒரு தடவை சரத் பொன்சேகாவுக்கு சுடு தண்ணீர் மற்றும் மருந்து ஆகிய வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணித்த போதிலும் அவை வழங்கப்படவில்லை என சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் முறையிட்டபோதே நீதிபதி இவ்வாறு பணித்தார்.

இராணுவத்தை விட்டு ஓடியவர்களை மறைத்து வைத்திருந்தமை தொடர்பிலான வழக்குக்காக சரத் பொன்சேகா நேற்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

இராணுவ விடயங்களில் ஊழல் செய்தார் என குற்றம் காணப்பட்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 30 மாத சிறைத் தண்டனை வழங்கியிருந்தமை தெரிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக