17 பிப்ரவரி, 2011

தமிழக மீனவர் கைதுக்கும் கடற்படைக்கும் தொடர்பில்லை இலங்கை கடற்படை முற்றாக மறுப்பு

யாழ். பருத்தித்துறை கடற்பரப்பினுள் தமிழக மீனவர்கள் 112 பேர் கைது செய்யப்பட்ட விடயத்துக்கும் கடற்படைக்கும் எவ்வித தொடர்புமில்லை என இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக் கப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் அவர்களது 18 வள்ளங்களும் கைப்பற்றப்பட்டதாக தமிழக த்திலுள்ள அரசியல்வாதிகளும் பொது அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுப்பதாகவும் கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். தமிழ் நாட்டில் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இலங்கையின் வட பகுதி கடலோரப் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபட்டி வருகின்றனர்.

யாழ். மீனவர்களின் வலைகள், உட்பட மீன் வளத்தையும் அள்ளிச் செல்கின்றனர். இது தொடர்பாக மீனவர்கள் தொடர்ந்தும் முறைப்பாடுகளை செய்து வருகின்றனர். இலங்கை கரையோரம் வரை வந்து மீன்பிடிப்பில் ஈடுபடும் இவர்களை கடற்படையினர் இதுவரை தடுத்து நிறுத்தவில்லை தாக்கவுமில்லை.

பருத்தித்துறைமுனை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட தமிழக மீனவர்களை யாழ். மீனவர்களே சுற்றிவளைத்து கரைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களே பொலிஸாரிடம் ஒப்படைத்தும் உள்ளனர். கடற்படையினர் இதில் தலையிடவுமில்லை தொடர்புமில்லை என்றும் கொமாண்டர் கோசல தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக