17 பிப்ரவரி, 2011

பதுளை பகுதியில் மீண்டும் மழை: தேயிலைச் செடி மலை 5 அடிக்கு தாழிறங்கியது



பதுளைப் பகுதியில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதி னால் மண் சரிவு அபாயம் ஏற் பட்டுள்ளது.

பதுளை - இங்குருகமூலை தோட்டப் பிரிவில் சுமார் ஐந்து ஹெக்டயர் தேயிலைச் செடிகளு ள்ள மலைப் பிரதேசம் தாழிறங்கி வருகின்றது. நேற்று முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததுடன் நேற்று இரவு மேற்குறிப்பிட்ட மலைப் பிரதேசம் ஐந்து அடிக்கு தாழிறங்கியுள்ளது.

இதனையடுத்து தோட்ட வைத்தியசாலை கீழிறங்கி யதினால் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு, வைத்தியசாலை இடிந்து விழுந்துள்ளதுடன் தோட்ட முன் பள்ளியின் சுவர்களும் இடிந்து ள்ளன.

இம் முன் பள்ளியிலிருந்த 18 சிறுபிள்ளைகளும், தேயிலைக் கொழு ந்து நிறுக்கும் இடமொன்றில் தங்க தற்காலிகமாக வைத்துள்ளனர். தோட்ட வைத்தியசாலை டொக்ட ரின் வாசஸ்தலமும் பாரிய வெடிப்பு க்களுக்குள்ளாகியுள்ளது.

பூமிப் பிரதேசம் தற்போதும் தாழிறங்கிக் கொண்டிருப்பதினால், அப் பகுதிக்கு மக்கள் செல்வதை தடை செய்யும் வகையில் தோட்ட நிருவாகத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் போடப்பட்டுள்ளது. பதுளை அரச அதிபரினாலும் இப் பூமிப் பிரதேசம் ஆபத்து மிகு தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கி ன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக