24 பிப்ரவரி, 2011

இலங்கை மீனவர்கள் 16 பேர் விடுதலை

இலங்கை மீனவர்கள் 16 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். இவர்கள் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் மன்னார் தெற்குக் கடல் எல்லையில் வைத்து, இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட் டனர்.

16 மீனவர்களையும் 3 ரோலர் படகுகளையும் பொறுப்பேற்றுக்கொண்ட இலங்கை கடற்படையினர் மீனவர்களை உரியவர்களிடம் கையளித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 21 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட் டிருந்தனர். 4 மீன்பிடிப் படகுகளுடன் 21 மீன வர்கள் கடற்படையினரால் அழைத்து வரப்பட்டு காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டி ருந்தனர்.

அதேநேரம் இந்தியாவில் எஞ்சியி ருக்கும் 73 இலங்கை மீனவர்க ளையும் விரைவில் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமை ச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தமை இங்கு குறிப் பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக