20 ஜனவரி, 2011

கிழக்கில் கால்நடைகளுக்கு கொலரா; வாய்ப்புண்


கொழும்பிலிருந்து மருத்துவ குழுக்கள் விரைவு;
அழிவினை மதிப்பீடு செய்யுமாறு அமைச்சர் தொண்டா உத்தரவுகிழக்கில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட பிரதேசங்களில் கால்நடைகளுக்குக் கொலரா மற்றும் வாய்ப்புண் நோய் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கான சிகிச்சைகளை அளிக்க கொழும்பிலிருந்து விசேட மருத்துவ குழுக்கள் கிழக்கு மாகாணத்திற்கு விரைந்துள்ளன.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோண மலை மாவட்டங்களுக்கு, கொழும்பு பண்ணைவிலங்கு திணைக்களத்தின் மருத்துவ குழுக்கள் மூன்று அனுப்பிவைக்கப் பட்டுள்ளன. ஏனைய பண்ணை விலங்குகளுக்கு நோய் பரவாமல் தடுக்க இவர்கள் அவசர சிகிச்சைகளை அளிப்பார்க ளென்று பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பண்ணை விலங்கு அபிவிருத்தி மற்றும் கிராமிய சமுதாய அபிவி ருத்தி அமைச்சர்ஆறுமுகன் தொண்ட மான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தாகப் பிரதியமைச்சர் கூறினார்.

இதேவேளை, வெள்ளத்தின் காரணமாகப் பண்ணை விலங்குத் துறைக்கு ஏற்பட்ட முழுமையான அழிவினை மதிப்பீடு செய்து எதிர்வரும் 24ஆம் திகதிகளுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமை ச்சர் தொண்டமான் அதிகாரிகளுக்கு நேற்று (19) பணிப்புரை விடுத்துள் ளார்.

கால்நடைத் துறையை மீளமைப்ப தற்கு 50% மானியம் வழங்குவதாக வும், கடன் அடிப்படையில் மாடு களைப் பெற்றுக்கொடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதேநேரம், கோழிப்பண்ணைத் தொழிலை மீளக்கட்டியெழுப்பு முக மாக 55 ரூபாவிற்குக் கோழிக் குஞ்சு களைப் பெற்றுத் தருவதாக உறுதிய ளித்த அமைச்சர் தொண்டமான், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உடனடியாக 25 ஆயிரம் கோழிக் குஞ்சுகளைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குளிர் தாங்க முடியாமல் இரண்டு இலட்ச த்திற்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்ததுடன் 44 ஆயிரம் ஆடுகளும் மரணித்துள்ளன. குளங் கள் உடைப்பெடுத்ததால் ஏழாயிரத் திற்கும் அதிகமான மாடுகள் உயிரி ழந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக