20 ஜனவரி, 2011

வெள்ளப் பாதிப்பு: 51 மில்லியன் ரூபா உடனடித் தேவை

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரப் பிரதிச் செயலாளரும், உடனடி நிவாரண இணைப்பதிகாரியுமான காத்தரின் ப்ரகங் பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி ஆராய்ந்த பின்னரே ஐ.நா. இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு எதிர்வரும் ஆறு மாதங்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், இதனை வழங்குவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக