20 ஜனவரி, 2011

உள்ளூராட்சி தேர்தல் - 2011 இன்று முதல் 27 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்பு


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்கப்படுகின்றன. இதற்கான சகல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிரி கூறினார்.

வேட்பு மனுக்கள் ஏற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு வேட்பு மனுக்களை ஏற்பது தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி நண்பகல் வரை வேட்பு மனுக்கள் ஏற் கப்படவுள்ளதோடு சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கு 26 ஆம் திகதி வரை காலம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு ஏற்கப்படுவதையொட்டி மாவட்ட செயலகங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சுமனசிரி கூறினார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் பொலிஸாருக்கு உரிய ஆலோசனை வழங்கியுள்ளார். 301 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மார்ச் நடுப்பகுதியில் தேர்தல் கள் நடத்தப்படவுள்ளன. தேர்தல் நடைபெறும் திகதி 27 ஆம் திகதி அறிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக