20 ஜனவரி, 2011

அழிவுற்றுள்ள வீடுகளுக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்டஈடு கூரைத் தகடுகளும் வழங்க ஏற்பாடு


வெள்ளம் காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளுக்கு ஐம்பதினாயிரம் (50,000) ரூபாப்படி நஷ்டஈடு வழங்கப்படவிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.

அதேநேரம் வெள்ளம் காரணமாக அழிவுற்றுள்ள வீடுகளுக்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கூரைத் தகடுகள் வழங்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 5781 வீடுகள் முழுமையாக அழிவுற்றுள்ளன. 23 ஆயிரத்து 19 வீடுகள் பகுதியாகச் சேதமடைந்துள்ளன. இவற்றில் முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாப்படி நாம் நஷ்டஈடு வழங்கவுள்ளோம். பகுதியாக சேதமடைந்துள்ள வீடுகளுக்கு அவற்றை மதிப்பீடு செய்து அதற்கேற்ப நஷ்டஈடு வழங்கப்படும். தற்போது மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக