20 ஜனவரி, 2011

12 ஏக்கர் கஞ்சா சேனை ‘தீ’ வைத்து எரிப்பு




தனமல்வில மற்றும் செல்லகதிர்காமம் பகுதிகளில் 12 ஏக்கர் கஞ்சா சேனையை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தீ வைத்து அழித்துள்ளனர்.

ஒன்பது அடி உயரமுடைய 44 ஆயிரம் கஞ்சா செடிகள் மேற்படி சேனையில் செய்கை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே. எம். எல். சரத்சந்திர தெரிவித்தார்.

அழிக்கப்பட்ட சேனைகளிலிருந்து சுமார் 19 கிலோ எடையுள்ள கஞ்சாக்களை அதிரடிப் படையினர் இந்த விசேட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றியுள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனமல்வில மற்றும் செல்லக் கதிர்காமம் பகுதிகளிலுள்ள தேசிய வனப் பூங்கா பகுதிகளிலேயே இந்த கஞ்சாச்சேனை செய்கை செய்யப்பட்டுள்ளது.

தனமல்வில சேனையிலிருந்து ஒரு கிலோ எடையுள்ள பொதி செய்யப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை திடீரென மேற்கொள்ளப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாக்களை மேலதிக விசாரணைக்காக அனுப்பிவைக்கப்பட்டு ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக