24 அக்டோபர், 2010

அடையாள அட்டையின் இலக்கம் உடஊ இலக்கமாக மாற்றம் நவம்பர் முதல் அமுல்

ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கம் வகிப்பவரின் அங்கத்துவ இலக்கம் அவரது தேசிய அடையாள அட்டையின் இலக்கமாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறை நவம்பர் மாதம் முதல் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் சகல ஊழியர் களையும் இணைத்துக்கொள்ளும் நட வடிக்கையை தொழில் உறவுகள் அமைச் சின் கீழுள்ள ஊழியர் சேமலாப நிதிய பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து பணத்தை மீளப்பெறுபவர்கள் தாமதமின்றி பணத்தைப் பெறுவதற்கும் தேவையற்ற ஆவணங்களை சமர்ப்பிக்கவும் அவசியமில்லை எனவும் தொழில் அமைச்சு தெரிவிக்கிறது.

புதிய நடைமுறையின்படி, ஊழியர் சேமலாப நிதியத்துக்குரியவரின் அங்கத்துவ இலக்கத்தை தேசிய அடையாள அட்டையின் இலக்கமாக மாற்றுவதற்குரிய படிவங்களை சகல தனியார் நிறுவனங்களுக்கு அனுப்ப ஊழியர் சேமலாபநிதிய திணைக்களம் நடவடிக்கை எடுத் துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக