24 அக்டோபர், 2010

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

புத்தளம் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.புத்தளம் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் இன்று காலை தீவிபத்து ஏற்றப்பட்டது இதன் காரணமாக அப்பிரதேசம் முழுவதும் புகை மண்டலமாகக் காணப்படுகின்றது.

இத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் கடற்படையினரும், விமானப்படையினரின் ஹெலிகெப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.

இத்தீ விபத்தில் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக